திமுக பிரமுகரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு

திமுக பிரமுகரின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு
 சிவகாசி அருகே திமுக பிரமுகரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே திமுக பிரமுகரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே தி.மு.க பிரமுகர் மோட்டார் சைக்கிள் எரிப்பு... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 40) தி.மு.க பிரமுகரான இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தி.மு.க பிரமுகர் மைக்கேல் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story