மத்திய மாவட்ட இளைஞர் அணி சார்பில் தி.மு.க. மாநாட்டுக்கு ரூ.12 லட்சம் நிதி

மத்திய மாவட்ட இளைஞர் அணி சார்பில் தி.மு.க. மாநாட்டுக்கு ரூ.12 லட்சம் நிதி
உதயநிதி ஸ்டாலினிடம் மாநாட்டு நிதி வழங்கிய திமுகவினர் 
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதனை பார்வையிட அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வந்து இருந்தார். அப்போது சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. அதனை மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அன்பு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விபின் நாகேந்திரன், பிரசன்னா, ரமணன், கார்த்திகேயன், போஸ் லோகேஷ், மாநகர துணை அமைப்பாளர்கள் சிவராஜ், வெங்கடேஷ், சூஹைல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story