தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா

தி.மு.க. சார்பில் முப்பெரும்  விழா

குமாரபாளையம் 32வது வார்டு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடந்தது.


குமாரபாளையம் 32வது வார்டு தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 32வது வார்டு தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், ஸ்கூல் பேக் வழங்கும் விழா, ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் விழா நடந்தது. தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர செயலர் செல்வம் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டுகள், ஸ்கூல் பேக், கல்வி கட்டணம் வழங்கினார். வார்டு நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story