ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு 

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழக முழுவதும் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேலாக வெயில் வாட்டி வருகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் ராசிபுரம் நகரை நோக்கி பல்வேறு வேலைகளுக்காக வந்து செல்கின்றனர். அவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நகர திமுக., சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. நா

மக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார், கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் குளிர்பானங்கள் உள்ளிட்ட நீர் சத்துமிக்க பானம் மற்றும் பழங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை வகித்தார். மேலும் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, கலைமணி, சாரதி,

நடராஜன் ,பிரபு, பழனிச்சாமி, வார்டு செயலாளர்கள் ஏடிசி சக்திவேல், கேசவன், தங்கதுரை,உள்ளிட்ட கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story