மதுராந்தகம் அருகே முப்பெரும் விழா

மதுராந்தகம் அருகே  முப்பெரும் விழா

முப்பரும் விழா

மதுராந்தகம் அருகே முப்பெரும் விழா நடைபெற்றது

மதுராந்தகம் டாக்டா் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கெங்குசாமி நாயுடு சிலை, கூடுதல் கட்டடம் திறப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

சோத்துப்பாக்கம் தொழிலதிபா் ஏவிகே. உமாபதி தலைமை வகித்தாா். மாநில இணை செயலரும், மதுராந்தகம் மண்டல செயலாளருமான எஸ்.ஆதிகேசவலு நாயுடு வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில், மாநில மூத்த துணைத் தலைவா் வி.வெங்கட விஜயன், மாநில துணைத் தலைவா் விஎம்.பிரபாகா், தாளாளா் என்எம்.சீதாராம நாயுடு, பொருளாளா் என். ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மாநில தலைவா் ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். புதிய கட்டடத்தை மாநில செயல் தலைவா் வி.மோகன் திறந்து வைத்தாா்.

Tags

Next Story