தி.மு.க. சார்பில் பொங்கல் விழா

தி.மு.க. சார்பில் பொங்கல் விழா

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட 16 கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி சமுத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் வழங்கி கொண்டாடினார்கள். விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் .ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரவி, செல்வகுமார், தர்மராஜ், தேவி, முன்னாள் நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நகர பொறுப்பாளரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு, சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு விழா நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் வெங்கடேசன், செந்தில்குமார், அழகேசன், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story