அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் மரியாதை

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் மரியாதை

திருச்சியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருச்சியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
சட்டமேதை அம்பேத்கரின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ்,போட்டோ கமால், இளங்கோ , உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

Tags

Next Story