சிவகங்கைக்கு வந்த திமுக இருசக்கர வாகன பேரணி - உற்சாக வரவேற்பு

சிவகங்கைக்கு வந்த திமுக  இருசக்கர வாகன பேரணி - உற்சாக வரவேற்பு

இருசக்கர வாகன பேரணி 

சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாடு மற்றும் நீட் விலக்கு கோரி விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் துவக்கிவைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணி தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்த பேரணி திருப்பத்தூர் வழியாக சிவகங்கை நகருக்கு நேற்று வந்தடைந்தது. இரு சக்கர வாகன பேரணியை பெருமாள் பட்டி விலக்கில் திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோர்ட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நீட் தேர்விற்கு விலக்கு அளித்திட கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து அரண்மனை வாசல், பேருந்து நிலையம் மற்றும் சிவகங்கை நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.

Tags

Next Story