மாங்கரையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாங்கரை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டனர்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, மாங்கரை பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள், சென்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அ.மணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் பொதுக்குழு உறுப்பினர் குட்டி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story