சுரண்டையில் திமுக மகளிரணி தேர்தல் பிரச்சாரம்

சுரண்டையில் திமுக மகளிரணி தேர்தல் பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பு


சுரண்டையில் திமுக மகளிரணி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில், மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில், சுரண்டை நகராட்சி பகுதியில் மகளிரணி அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா சுதாகர் தலைமையில் சுரண்டை நகராட்சி அண்ணாநகர், ஆலடிப்பட்டி பகுதியில் இன்று வீதி, வீதியாக சென்று மகளிரணி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ண ராஜ், முகமது ரகீம், மகளிரணி நிர்வாகிகள் சுசீலா, சபர்நிஷா, கற்பகசெல்வி, சிவசண்முக ஞானலட்சுமி, ராஜேஸ்வரி, ஷாலிமேரி, மகாதேவி, ரேவதி, பாத்திமா, சாந்தி, பூங்கோதை, , சங்கவி, பத்மா, சரஸ்வதி, மீனாட்சி, பாப்பா, சசி, செல்வி, ராமலட்சுமி, உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story