திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை

திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தியாகராஜன், மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.‌ திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் இருந்து திரளான கட்சியினர் இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தில்லைநகர் பகுதி செயலாளர் நாகராஜன், அண்ணா நகர் பகுதி செயலாளர் கமால் முஸ்தபா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் துரைராஜ், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி மற்றும் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளை நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story