செஞ்சி வந்த தி.மு.க. இளைஞரணி விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

செஞ்சி வந்த தி.மு.க. இளைஞரணி விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
 இருசக்கர வாகன பேரணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் 
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தி கையெழுத்து பெறவும், அடுத்த மாதம் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாடு குறித்தும் இரு சக்கர வாகன பேரணியை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்த பேரணி நேற்று முன்தினம் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு செஞ்சி தொகுதிக்குட்பட்ட ஆலம்பூண்டி செஞ்சி வழியாக மயிலம், கூட்டேரிப்பட்டு, திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு சென்றது. பின்னர் ஆலம்பூண்டி மற்றும் செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் இருசக்கர வாகன பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் இருசக்கர வாகன பேரணி செஞ்சி-திருவண்ணாமலை சாலையிலிருந்து புறப்பட்டு தேசூர்பாட்டை, சிங்கவரம் சாலை, காந்தி பஜார், திண்டிவனம் சாலை ஆகிய பகுதிகள் வழியாக சென்று பயணியர் விடு தியை அடைந்தது. அங்கு நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கையெழுத்து பெறப்பட்டது. இதில் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றியக்குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், பச்சையப்பன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் கதிரவன், செஞ்சி நகர செயலாளர் கார்த்தி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story