தி.மு.க. இளைஞர் அணி மாநாடு: கூடுதல் டி.ஜி.பி. சேலத்தில் ஆலோசனை

தி.மு.க. இளைஞர் அணி மாநாடு:  கூடுதல் டி.ஜி.பி. சேலத்தில் ஆலோசனை

பைல் படம் 

திமுக இளைஞரணி மாநாட்டின் பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. அருண் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 21-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் தலைமை தாங்கி மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சரக டி.ஐ.ஜி. உமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா மற்றும் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story