நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் திமுகவினர் மனு

நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம்  திமுகவினர் மனு

அமைச்சரிடம் மனு 

மானூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் கங்கைகொண்டான், வடகரை, புங்கனூர், கைலாசபுரம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் தரைமட்ட பாலம் கனமழையால் சேதமடைந்தது. ஐந்து நாட்கள் அப்பகுதியில் போக்குவரத்து செல்ல முடியாமல் தடைபட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என நேற்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் மானூர் பகுதி திமுகவினர் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட அமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக திமுகவினரிடம் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story