சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் திடீர் சாவு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் திடீர் சாவு

டாக்டர் சடலம் மீட்பு

சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஓணம்பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி (வயது 33), டாக்டர். அருணகிரிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் டாக்டர் நந்தினி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்தனர். அருணகிரி நேற்று காலை வழக்கம் போல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்தார். பிற்பகல் 3 மணி அளவில் அவருடன் பணியாற்றும் சக டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அருணகிரியின் காரை பார்த்தனர். எனவே அவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு அவரை தேட ஆரம்பித்தனர். இதயவியல் பிரிவில் உள்ள ஒரு கழிப்பறையில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கழிவறைக்குள் அருணகிரி இறந்த கிடந்ததை ஜன்னல் வழியாக சக டாக்டர்கள் பார்த்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அருணகிரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags

Next Story