தனிநபர் குறித்து விமர்சனம் செய்வதில்லை - ப.சிதம்பரம்

தனிநபர் குறித்து விமர்சனம் செய்வதில்லை - ப.சிதம்பரம்

தனிநபர் குறித்து நான் எப்போதும் விமர்சனம் செய்வதில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தனிநபர் குறித்து நான் எப்போதும் விமர்சனம் செய்வதில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை நேருபஜார் பகுதியில் உள்ள மிக பழமைவாய்ந்த வாலாஜா நவாம் ஜும் ஆ மசூதியில் சிவகங்கை நகரில் உள்ள அனைத்து ஜமாத் தலைவர்களையும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சந்தித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களுடன் கலந்துரையாடிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்திக்கையில், பா.ஜ.க வேட்பாளர் தேவநாதனுக்கு தொடர்புடைய நிதி நிறுவனத்தில் ரூ525 கோடி மோசடி புகார் எழுந்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு , தான் ஒரு நாளும் தனி நபர் விமர்சனம் செய்வதில்லை என்றும், இருந்த போதிலும் அவர் மீது எழுந்திருக்கும் விமர்சனத்திற்கு பதிலளிக்க வேண்டியது அவரது கடமை என்றும் பேசினார்.

அதேபோல் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரத்திற்கான வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தின் 39 தொகுதி பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என்றால் சிவகங்கையிலும் (தனது மகனான கார்த்தி சிதம்பரமும்) வெற்றி பெறுவார் என பதிலளித்தார்

Tags

Next Story