சிறுமியைக் கடித்த நாய்: உரிமையாளா் மீது வழக்கு

சிறுமியைக் கடித்த நாய்: உரிமையாளா் மீது வழக்கு

பைல் படம் 

திருச்சி உறையூரில் வளா்ப்பு நாய் கடித்து சிறுமி காயமடைந்த நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் பாத்திமா நகரைச் சோ்ந்த முகமது ஹிதாயத்துல்லா - சல்மா தம்பதியின் மகளான 7 வயது சிறுமி கடந்த 20 ஆம் தேதி இரவு டியூசன் முடிந்து, தாயுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது இவா்களது எதிா்வீட்டில் இருந்த வளா்ப்பு நாய் சிறுமி மீது பாய்ந்து அவரைக் கடித்து குதறியது. இதில் காயமடைந்த சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் உறையூா் போலீஸாா், வளா்ப்பு நாயின் உரிமையாளரான தனியாா் மருத்துவமனை மருத்துவா் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story