நாயை முடுக்கியதால் தகராறு - ஒருவர் கைது

நாயை முடுக்கியதால் தகராறு - ஒருவர் கைது

கைது 

வையப்பமலையில், பக்கத்து வீட்டிற்குள் வந்த நாயை முடுக்கியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மல்லசமுத்திரம் அருகே, வையப்பலையில் பெரியமணலி பிரிவு சாலையில் வசித்து வருபவர் செந்தில்குமார்42. இவரது வீட்டில் வளர்க்கு நாய் கடந்த 17 ம்தேதி இரவு 11மணியளவில், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் சேகரன்55 என்பவரது வீட்டிற்கு வந்துள்ளது. இதைப்பார்த்த சேகரன் நாயை முடுக்கியுள்ளார். எப்படி எனது நாயை முடுக்கலாம் என செந்தில்குமாருக்கும், சேகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. செந்தில்குமாருக்கு ஆதரவாக, வையப்பமலை மலைக்காலஅம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்32. என்பவர் வந்துள்ளார்.

இதில், ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியும், கை கலப்பும் ஏற்பட்டது. இதில், சேகரனுக்கும், செந்தில்குமாருக்கும் உள்காயம் ஏற்பட்டது. சேகரன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், செந்தில்குமார் ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேகரன் அளித்த புகாரின்பேரில், சதீஷ்குமார் மீது நேற்று, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து, அவரை கைதுசெய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்து பின்னர், நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags

Next Story