நாய் குறுக்கே வந்ததால் விபத்து - மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

நாய் குறுக்கே வந்ததால் விபத்து - மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

விபத்து

நாய் குறுக்கே வந்ததால் விபத்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி. மகனுடன் சென்றபோது பரிதாபம்.
விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம் திருக்கனூர் அடுத்த மணலிப்பட்டு கோரைக்கேணி பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50), மகன் மதன்குமார் (30). இவர்கள் 2 பேரும் திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் மதன்குமார், ஜெயலட்சுமி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டனர். திருக்கனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தனியார் எலக்ட்ரிக் கடை எதிரே நாய் ஒன்று திடீரென்று குறுக்கே ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க மதன்குமார் திடீரென பிரேக் பிடித்தார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைத டுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். பின்பக்கமாக விழுந்ததில் ஜெயலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்திலிருந்து அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார், இது குறித்த புகார் எண் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story