ராமநாதபுரம் விபத்தில் நாய் பலி

ராமநாதபுரம் விபத்தில் நாய் பலி

நாய் பலி

முதுகுளத்தூர் செல்லமாய் வளர்த்த நாய் விபத்தில் பலி- கதறித்துடித்த முதியவர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கூலித் தொழிலாளி தாஸ் ஆசையாக வளர்த்து பாதுகாத்து வந்த செல்லப்பிராணி நாய் சாலையை கடக்க முயன்ற போது முதுகுளத்தூரில் இருந்து திருவரங்கம் வழியாக பரமக்குடி செல்லும் நகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தது. செல்லமாய் வளர்த்த நாய் விபத்தில் உயிர் இழந்து சாலையோரத்தில் கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர் தாஸ் உயிரிழந்த நாயை கட்டியணைத்து தேம்பித் தேம்பி கண்ணீர் மல்க அழுது புலம்பியது அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story