சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம்

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம்

சேலத்தில் அன்னதானம் வழங்கல்

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணம் அடைய வேண்டும். மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் நடிகர் விஜய் பிறந்தநாளைெயாட்டி சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மிலிட்டரி ரோட்டில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்,

அவர்களுடன் இருக்கும் உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் மதிய உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இவை விஜய்யின் விலையில்லா உணவகத்தில் இருந்து 2 வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. அந்த வாகனத்தை தமிழக வெற்றிக் கழக மாவட்டத் தலைவர் தமிழன் ஆ.பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் எருமாபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

முகாமை மாவட்டத் தலைவர் ஆ.பார்த்திபன் தொடங்கி வைத்தார். முகாமில் 100 பேர் ரத்தம் வழங்கினர். மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் ரத்ததான முகாம் நடந்தது.

மேலும் தெற்கு ஒன்றியம் சார்பில் குகை, தாதம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் விஜய் பிறந்தநாளைெயாட்டி நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Tags

Next Story