அரசு வேலை வாங்கி தருவதாக பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்

அரசு வேலை வாங்கி தருவதாக  பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்
அரசு வேலை வாங்கி தருவதாக பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் sp அறிவுரை
அரசு வேலை வாங்கி தருவதாக பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலர் பணம் கொடுத்து ஏமாறுவது அதிகரித்துள்ளது. அரசு வேலையை போட்டித் தேர்வுகள், உரிய தகுதிகள் மூலமாக மட்டுமே பெற முடியும்.தனியார் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு, அந்நிறுவனம் சம்மந்தப்பட்ட துறையில் பதிவு செய்துள்ளதா என கண்டறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. எனவே தங்கள் பகுதியில் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கிடலாம் என யாராவது அணுகினால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசப் பெருமாள் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story