வரதட்சணை கொடுமை - கணவர் உட்பட 9 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை - கணவர் உட்பட 9 பேர் மீது வழக்கு

காவல் நிலையம் 

அருமனை அருகே திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு கொல்லகுழிவிளை பகுதியை சேர்ந்தவர் ஷஜூ. இவரது மகள் ராதிகா.செறுவல்லூர் மண்ணன்விளை பகுதியை சேர்ந்தவர் சஜு.இருவருக்கும் கடந்த 27/5/200 திருமணம் நடந்தது.அப்போது 25 பவுன் நகை, ரூ 2 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டுஉபயோக பொருட்கள் சீர் வரிசையாக தரப்பட்டது.

திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டது.மேலும் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கணவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தியதுடன் தனக்கு சொந்தமான ஆறரை சென்ட் நிலத்தை சகோதரர் பேரில் எழுதி வைத்த தாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கணவரின் உறவினர்களான பிரான்சிஸ், ஜெயா ஷைன்,ஸ்டீபன், பிரன் சிங்,தினேஷ் பிளாரன்ஸ்,அஜிதா ராகினி,லிரின்ஸிஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை கோரி குழித்துறை 1 ஜே எம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் ஒன்பது பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடக்கிறது.

Tags

Next Story