அரசு கல்லூரியில் வரதட்சணை விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரசு கல்லூரியில் வரதட்சணை விழிப்புணா்வு நிகழ்ச்சி
 விழிப்புணா்வு நிகழ்ச்சி
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் வரதட்சணை குறித்த நடந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் வரதட்சணை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி முதுகலை சமூக பணி மாணவிகள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சின்னத்தாய் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் துறை அலுவலா் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட சமூக நல மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அலுவலா் மதிவதனா ஆகியோா் வரதட்சணை குறித்து சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கல்லூரி முதுகலை சமூக பணி மாணவிகள் நந்தினி, ஜெயந்தி, அன்டோ மொ்லின், லிசா சேரத், பவானி மற்றும் சுரண்டை காமராஜா் அரசு கல்லூரி முதுகலை மாணவிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story