குடிநீரில் கலக்கும் கழிவு நீர் - பொதுமக்கள் புகார்

குடிநீரில் கலக்கும் கழிவு நீர் - பொதுமக்கள் புகார்

குடிநீரில் கழிவு நீர்

குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் நகர்ப்பகுதியில் அமைந்துள்ளது வெங்கடேசபுரம்.இப்பகுதிக்கு காவிரி குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் குடிநீர் விநியோகிக் கப்படும் நாட்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் குடிநீர் கலங்கலாக நிரம் மாறி இருப்பதாக வும் அதனை பயன்படுத்த முடியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என வெங்கடேசபுரம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags

Next Story