கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

மனு அளித்த முன்னாள் அமைச்சர்

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு தண்ணீர் வாங்கி உற்றுவதை தடுக்க கூடாது எனவும் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனு அளித்தனர்.

முன்னாள் அமைச்சருடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,அம்மன் அர்ஜுனன்,பி.ஆர்.ஜி அருண்குமார்,ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி ஆகியோர் மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்ததாக தெரிவித்தவர் அதிமுக ஆட்சியில் குளங்கள்,அணைகள் தூர் வாரப்பட்டு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டதாகவும் ஆனால்,

இப்போது இவை எதுவும் செயல்படுத்த படுவதில்லை என தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் பில்லூர்,சிறுவாணி, அழியார் அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரம் எனவும் இந்த அணைகள் தூர் வாரி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட இப்போது அமைப்பதில்லை எனவும் இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தபட்டதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.பல இடங்களில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை குடி தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும்,

மாநகராட்சி நிர்வாகம் இதை முறையாக கவனிப்பதில்லை என்றவர் முறையாக குப்பைகள் கூட எடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்கி வைக்க விடுவதில்லை இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும் எனவும் அத்திகடவு,அவினாசி திட்டத்தையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தார்.எஸ்ஐஎச்எஸ் காலனி பாலம் விரைத்து முடிக்க வேண்டும் என்றவர் கோவையில் நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் எனவும்,

பொது கழிப்பிடங்கள் கூட சுத்தம் செய்யப்படுவது இல்லை என தெரிவித்தார்.மேலும் போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாகவும் இதற்கு உடனே அனுமதிக்க வேண்டும் எனவும் பல்வேறு சாலைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றை வேகமாக அமைத்திட வேண்டும் என தெரிவித்தார். பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி உற்றி வரும் நிலையில் அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர் எனவும் இதை தடுக்க கூடாது எனவும் ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை எனக்கூறிய அவர் கோவை மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை எனவும் குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story