15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்: பொதுமக்கள் பாதிப்பு

15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்: பொதுமக்கள்  பாதிப்பு

தூத்துக்குடி அருகே 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


தூத்துக்குடி அருகே 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம் இங்கு 5000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இன்னும் குடிநீர் வழங்கப்படாத நிலையே உள்ளது இதன் காரணமாக பொதுமக்கள் தெருக்களில் உள்ள பைப்புகளிலேயே குடிநீரை பிடித்து வருகின்றனர் அதுவும் குடிநீர் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதால் வீட்டிற்கு ஐந்து முதல் ஆறு குடங்கள் வரை தண்ணீர் கிடைக்கிறது இதன் காரணமாக குடிநீரை தாங்கள் ஒரு குடம் பத்து ரூபாய் என விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் மற்ற தேவைகளுக்கான தண்ணீரும் முறையாக வராத காரணத்தால் அதையும் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையே உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் கிராமத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story