மதுபோதையில் தாறுமாறாக டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் கைது.

மதுபோதையில் தாறுமாறாக டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் கைது.

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன்

கொல்லங்கோடு அருகே மது போதையில் தாறுமாறாக சாலையில் டெம்போவை ஓட்டிச் சென்றவரை துரத்தி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் இரவு 8 மணியளவில் ஒரு டெம்போ சாலையில் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த கொல்லங்கோடு தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமார் டெம்போவை நிறுத்த சைகை காட்டினார். ஆனால் டெம்போ நிற்காமல் சென்றது.பின்தொடர்ந்து சென்ற ஏட்டு, கொல்லங்கோடு காவல் நிலையம் முன் டெம்போவை தடுத்து நிறுத்தினார். ஆனால் டிரைவர் டெம்போவில் இருந்து இறங்கவில்லை. இந்நிலையில் திடீரென டிரைவர் டெம்போவை ஓட்டி சென்றார்.

மீண்டும் ஏட்டு டெம்போவை பின்தொடர்ந்து சென்றார். கண்ணனாகம் சந்திப்பில் டிராபிக்கில் மாட்டி நின்ற டெம்போவை ஒரு போலீஸ் உதவியுடன் மடக்கி பிடித்து, டிரைவருடன் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.இது சம்பந்தமாக கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ் புகாரின் பேரில், டெம்போவை ஓட்டி வந்த கிராத்தூர் மருதங்காவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மீது அஜாக்கிர தையாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story