அரசு போக்குவரத்து கழக பணிமனையில்செல்போன் திருடிய டிரைவர் கைது

அரசு போக்குவரத்து கழக பணிமனையில்செல்போன் திருடிய டிரைவர் கைது

பைல் படம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் செல்போன் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த முத்து என்பவர் அலுவலக பணிக்காக கடந்த 9ம் தேதி சேலம் போக்குவரத்து கழக டிப்போவிற்கு வந்தார். பின்னர் அங்கு காத்திருப்போர் அறையில் தூங்கி ஓய்வு எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அவரின் செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது, அதே டிப்போவில் டிரைவராக வேலை செய்து வரும் சுரேஷ்குமார் (38) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பணிமனை மேலாளர் முரளி (53), பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிய சுரேஷ்குமாரை கைது செய்து செல்போனை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story