கடன் பெற்ற நிறுவனத்தின் டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற ஓட்டுனர்

கடன் பெற்ற தனியார் நிதி நிறுவனத்தின் டார்ச்சரால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த ஓட்டுனர். போலீசார் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் வயது - 52 இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார், இந்நிலையில் தனது குடும்ப செலவிற்காகவும் வீட்டு வேலை செய்யும் பணிக்காகவும், தனது சகோதரர் மருமகள் நதியா, 35 என்பவர் மூலர். பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் 90 ஆயிரம் கடன் பெற்றுள்ளார், மாதத் தவணையை சரியாக கடந்த 15 மாதங்களாக கட்டி வருகிறார் இந்நிலையில் சற்று உடல்நிலை கோளாறால் மாதத் தவணை கட்ட தாமதமானதால் இரண்டு மாதத் தவணை கட்டவில்லை என தெரிகிறது இதனை தொடர்ந்து அடுத்த தவணை கட்ட சென்றபோது கூடுதல் தொகை இருந்ததால் இதுகுறித்து பஜாஜ் பைனான்ஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். உடனே அதற்கு போதுமான விளக்கம் தராததால் பிப்ரவரி மாத தவணையும் காலதாமதம் ஆனது இதனை தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி மாலை செல்போன் மூலம் மணிமாறனை தொடர்பு கொண்ட பைனான்ஸ் அதிகாரிகள் பணத்தை கட்டச் சொல்லி டார்ச்சர் செய்துள்ளனர் மேலும் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி யுள்ளனர், இதனால் மன உளைச்சலில் இருந்த மணிமாறன் இடம் இருந்து செல்போனை வாங்கி அவரது மனைவி பேசி உள்ளார்,அப்போது இரண்டு நாட்கள் தவணை கொடுத்தால் பணத்தை கட்டி விடுவதாக தெரிவித்த நிலையில் அவரிடமும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனை கணவரிடம் தெரிவித்த புவனேஸ்வதி படுக்கைக்கு சென்று விட்டார், விரக்தியில் இருந்த மணிமாறன் கடையிலிருந்து மூன்று பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் வாங்கி வந்து இரவு 10 மணி அளவில் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை குடித்துள்ளார், இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு இருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவர்களின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார் இதை தொடர்ந்து அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது குறித்து பெரம்பலூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிதி நிறுவன டார்ச்சரால் ஓட்டுநர் மணிமாறன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story