பாலத்தில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி!

பாலத்தில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி!

பைல் படம்

வந்தவாசி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆயிலவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோபு (வயது 40) லாரி டிரைவர். இவர், சம்பவத்தன்று ஆயிலவாடி-மேல்செம்பேடு சாலையில் உள்ள சிறுபாலம் மீது அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி சிறுபாலத்தில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த கோபு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story