லாரி விபத்தில் டிரைவர் பரிதாப பலி

லாரி விபத்தில் டிரைவர் பரிதாப பலி

விபத்து 

கும்மிடிப்பூண்டி அருகே லாரி விபத்தில் டிரைவர் பரிதாப பலி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சென்னையில் இருந்து வந்த மற்றொரு லாரி நேற்று வேகமாக மோதியது. இதில் ஒரு லாரியின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்தது. இதில் பொன்னேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் சக ஓட்டுநர்கள் மீட்டுப் பணியில் ஈடுபட்டனர். பின்பு மீட்க முடியாமல் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து லாரியில் சிக்கிய ஓட்டுநரை மீட்க கடுமையாக போராடினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரை ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story