குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய குழியில் விழுந்து டிரைவர் படுகாயம் 

குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய குழியில் விழுந்து டிரைவர் படுகாயம் 
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய குழியில் விழுந்து டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஆன்டிசன் மகன் ஆதர்ஷ் (19) இவர் டிரைவர் ஆக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு வேலை நிமித்தமாக ஆதர்ஷ் திங்கள் நகரில் இருந்து தோட்டியோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். கண்டன் விளை பகுதியில் இந்த சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு சீரமைக்கப்படாத நிலையில் ஆபத்தான குழிகள் உள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் சென்ற ஆதர்ஷ் திடீரென மோட்டார் சைக்கிளுடன் அந்த குழிக்குள் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். அப்பகுதியாக வந்தவர்கள் கண்டு அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தற்போது சுங்கான் கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story