மினி வேன்-லாரி மோதல்: டிரைவர் பலி!

மினி வேன்-லாரி மோதல்: டிரைவர் பலி!

மாத்தூர் காவல் நிலையம் 

தஞ்சாவூர் மினி வேன்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி.
கீரனுார்:தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்ட் கேட் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(47). வேன் டிரைவர். நேற்று மாலை வழக்கம்போல் மினி வேனில் பூச்சி மருந்து ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தார். தேசிய நெடுஞ் சாலையில் சேப்பளாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கம்பிகளை இறக்கிவிட்டு திரும்பிய லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி மணிமாறன் அதே இடத்தில் உயிரிழந்தார். லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த விபத்து நடப்பதற்கு சிறிது மணி நேரத்துக்கு முன்பு மாத்துார் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story