ஓட்டுனரின்றி ஓடிய பேட்டரி ஆட்டோ பைக்கில் வந்தவர் காயம்

ஓட்டுனரின்றி ஓடிய பேட்டரி ஆட்டோ பைக்கில் வந்தவர் காயம்

சென்னை வளசரவாக்கத்தில் ஓட்டுனரின்றி ஓடிய பேட்டரிஆட்டோ மோதியதில் பைக்கில் வந்தவர் காயம் அடைந்தார்.


சென்னை வளசரவாக்கத்தில் ஓட்டுனரின்றி ஓடிய பேட்டரிஆட்டோ மோதியதில் பைக்கில் வந்தவர் காயம் அடைந்தார்.

வளசரவாக்கம் மண்டலத்தில், தனியார் நிறுவனம் சார்பில் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக பேட்டரியில் இயங்கும் ஆட்டோ பயன்படுத்தப்படுகிறது. நேற்று காலை, மதுரவாயல் 147வது வார்டு ஆலப்பாக்கம் பிரதான சாலையில், அந்தோணி என்பவர், குப்பை தொட்டி அருகே வாகனத்தை நிறுத்தினார். அப்போது, பேட்டரி ஆட்டோ திடீரென தானாக தறிகெட்டு ஓடி சாலையில் சென்ற, இரு பைக்குகள் மீது மோதியது.

இதில், மதுரவாயல், ஆலப்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், 55, என்பவர் காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story