டிரைவர் மர்ம மரணம் உறவினர்கள் போராட்டம் !

டிரைவர் மர்ம மரணம் உறவினர்கள் போராட்டம் !
 மர்ம மரணம் 
சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் (37). டிரைவரான முருகன் இன்று மாலையில் அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை வேனில் ஏற்றுக் கொண்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வந்து வேனில் வந்து கொண்டிருந்தார். சங்கரன்கோவில் நகரப் பகுதியில் வேனில் வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதனால் வேனில் உள்ள பொதுமக்களை இறக்கிவிட்டு போலீசார் சங்கரன்கோவில் டவுன் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர். அங்கு வேன் டிரைவர் முருகன் இறந்த நிலையில் இருந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் வேன் டிரைவர் முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் முன்பு உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story