சாலையோரம் கொட்டப்படும் குப்பை அகற்ற - வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோரம் கொட்டப்படும் குப்பை அகற்ற -  வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்றி எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட மதுராந்தகத்தில் இருந்து கக்கிலபேட்டை வழியாக, திருக்கழுக்குன்றம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், கக்கிலபேட்டை அடுத்து மேலவேலம்பேட்டை செல்லும் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம், ஹோட்டல்களில் மீதமாகும் உணவு கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் வீசிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியை கடக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் முகம் சுளிப்புடன் சென்று வருகின்றனர். எனவே, சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். இனிமேல், அந்த இடத்தில் குப்பை கொட்டக் கூடாது என, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story