அம்பத்தூரில் கார் மோதி ஓட்டுனர்,மனைவி பலத்த காயம்

அம்பத்தூரில் கார் மோதி ஓட்டுனர்,மனைவி பலத்த காயம்

விபத்தில் சிக்கிய கார் 

சென்னை அம்பத்தூர் அருகே புதூர் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மிதிவண்டி மீது மோதிய சம்பவத்தில் கார் ஓட்டியவரின் மனைவி உட்பட பலத்த காயம் அடைந்தனர்.

சென்னை அம்பத்தூர் அருகே புதூர் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மிதிவண்டி மீது மோதிய சம்பவத்தில் கார் ஓட்டியவரின் மனைவி உட்பட பலத்த காயம் மற்றும் மிதிவண்டி கொண்டு வந்த நபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் புதூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் தனது மனைவியுடன் ஃபோர்ட் ஃபிகோ காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எர்டிகா, மற்றும் மாருதி ஆல்டோ கார் மீது மோதி பின் சைக்கிளில் வந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சந்திரனின் மனைவிக்கு கழுத்து மற்றும் வாயில் காயம் ஏற்பட்டது.

மேலும் சைக்கிளில் வந்தவருக்கு இடது கை தோல் பட்டை எலும்பு முறிந்த நிலையில் இருவரையும் ஆவடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story