பெரம்பலூர் மாவட்ட சிஐடியு சார்பாக ஓட்டுநர் தினம் கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்ட சிஐடியு சார்பாக ஓட்டுநர் தினம் கொண்டாட்டம்

சிஐடியு

ஜூன் -1 ம் தேதி ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட CITU ஆட்டோ சங்கம் சார்பில் ஓட்டுனர் தினம் ஜுன் 1ம் தேதி பகல் 12 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது

ஜூன் -1 ம் தேதி ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட CITU ஆட்டோ சங்கம் சார்பில் ஓட்டுனர் தினம் ஜுன் 1ம் தேதி பகல் 12 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஓட்டுநர் தின ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஓட்டுனர் தினத்தை பற்றி விளக்கி பேசினார்.

மேலும் இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆட்டோ ஸ்டேன்டு புதிய பேருந்து நிலைய ஆட்டோநிறுத்தம் பழைய பேருந்து நிலையம் ஆட்டோ நிறுத்தம் GH ஆட்டோ நிறுத்தம் தனலட்சுமி ஆட்டோ நிறுத்தம் சத்திரமனை ஆட்டோ நிறுத்தம் ஆகிய ஆட்டோ நிறுத்தங்களில் ஓட்டுனர் தின ஸ்டிக்கர் ஒட்டி ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்.

என்னைத் தொடர்ந்து ஓட்டுனர் தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இதில் சிஐடிய ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி மாவட்ட துணைச் செயலாளர் தீனதயாளன் செயற்குழு உறுப்பினர் பாபு மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகள் ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story