ஓட்டுநர் உரிமம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஓட்டுநர் உரிமம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர்
வட்டாரப் போக்குவரத்து ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பான சேவைகள் விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறையில் பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களின் முகவரிக்கே அனுப்பிவைக்கப்படும் பணி கடந்த 28ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் போக்குவரத்துத்துறைக்கான புதிய ஆணையரக கட்டிடம் திறப்பு விழாவின் போது, துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் இருந்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பிவைக்கப்படும் சேவை நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு இந்த சேவையை பெற கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது அதன்படி. 28.02.2024 முதல் அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பிவைக்கப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்படமாட்டாது. எனவும் வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் அலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய இரண்டும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால்,

அத்தகைய நேர்வுகளில் பதிவுச்சான்றுகளும், ஓட்டுநர் உரிமங்களும் விரைவு அஞ்சல் மூலம் டெலிவரி செய்யப்படமாட்டாது. அத்தகைய தபால்கள் மீண்டும் ஆர்.டி.ஓ மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு தபால் துறையால் உரிய நபருக்கு டெலிவரி செய்யப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடும். அத்தகைய நேர்வுகளில் வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் சரியான முகவரி மற்றும் அலைபேசி எண்ணைப் பதிவு செய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம்; செலுத்தி,

அவ்விரு விபரங்களும் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நேர்வுகளில் விண்ணப்பதாரர் ஆர்.டி.ஓ மற்றும் பகுதி அலுவலகத்தை அணுகினாலும் அவருக்கு உரிய சான்று நேரடியாக வழங்கப்படமாட்டாது.விண்ணப்பதாரர் வெளியூர் சென்று இருந்தாலோ அல்லது வீடு பூட்டப் பட்டிருந்தாலோ அவரது ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச்சான்று தபால் துறை மூலம் டெலிவரி செய்யப் படாமல் திரும்ப பெறப்பட்ட நேர்வுகளில் தொடர்புடைய விண்ணப்பதாரர்

அலுவலகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவரிடம் மேற்படி சான்றுகள் நேரடியாக ஒப்படைக்கப்படாமாட்டாது. மாறாக அத்தகைய விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை பெற்றுக் கொண்டு அதன்மூலமாகவே அனுப்பிவைக்கப்படும்.தவறான முகவரியோ அல்லது அலைபேசி எண்ணையோ விண்ணப்பதாரர் மென்பொருளில் பதிவேற்றம் செய்து

இருந்தால் அதற்கு விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே, பொதுமக்கள் இந்த சேவையைப் பெறுவதற்கு தங்களது உண்மையான முகவரியையும் தங்களின் அலைபேசி எண்ணையும் மட்டுமே தங்களது ஓட்டுநர் உரிமம்/ பதிவுச்சான்று விண்ணப்பங்களில் தெளிவாக குறிப்பிடவேண்டும். மாறாக இடைத்தரகர்கள்/ ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகளின் முகவரியையோ அலைபேசி எண்ணையோ குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம்/ பதிவுச்சான்று தற்காலிக முடக்கம் செய்யப்படும்.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி மீண்டும் வாகன்/சாரதி மென்பொருளில் தங்களது சரியான முகவரியையும் அலைபேசி எண்ணையும் உள்ளீடு செய்து மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பின்னரே அது ஒப்புதல் அளிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம்/ பதிவுச்சான்று விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் இந்த விரைவு அஞ்சல் சேவையை துவக்கி வைத்திருப்பதன் மூலம் ஆர்டிஓ/ பகுதி அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வருவது கணிசமாகக் குறைவது மட்டுமல்லாது உரிய நபர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே ஆவணத்தினைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

இத்தகைய வசதியினை பொது மக்கள் ஒத்துழைப்பு தந்து இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story