போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு பேரணி 

குறிஞ்சிப்பாடி அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை தாங்கினார். நாட்டு நல பணி திட்ட அலுவலர் விஸ்வநாதன் முன்னிலையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் வீரசேகரன் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாணவர்கள் பேரணி பள்ளியிலிருந்து தொடங்கி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story