அரசு மருத்துவமனையில் ரகளை - போதை ஆசாமி கைது

அரசு மருத்துவமனையில் ரகளை - போதை ஆசாமி கைது

பிரபு 

அரசு மருத்துவமனையில் மது போதையில் கண்ணாடி கதவுகளை உடைத்து சேதப்படுத்தி, மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்களை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

சங்ககிரி, கோட்டை தெரு பகுதியைச் சேர்ந்த பிரபு (38). சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரன் என்பவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது பிரபு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிரபு அவரது நண்பர் கவியரசுவை தாக்கி, மருத்துவமனை ஆண்கள் வார்டு பிரிவில் உள்ள கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், பணியாளர்கள், செவிலியர்களை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சங்ககிரி அரசு மருத்துவமனை துணை மருத்துவ அலுவலர் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story