பணம் பறிக்க முயன்று புதை குழியில் விழுந்த போதை வாலிபர்கள்

பணம் பறிக்க முயன்று புதை குழியில் விழுந்த போதை வாலிபர்கள்

பைல் படம் 

இரணியல் அருகே வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியோடும் போது புதைகுழியில் விழுந்த வாலிபர்களை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் - கண்டன் விளை ரோட்டில் இரவு மேல்கரை பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற வாலிபர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இரணியல் வள்ளியாற்று பாலம் அருகில் வந்ததும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினார். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் இளங்கோவை பைக்கால் இடித்து தள்ளி பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை அந்த மூன்று வாலிபர்களும் பறித்துள்ளனர்.

இளங்கோ சத்தம் போடவே அப்பகுதி இளைஞர்கள் மற்றும் அந்த வழியாக வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை துரத்தினர். இதில் ஒரு வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்று விட்டார். மற்ற இரண்டு வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர். இதில் பொதுமக்கள் விடாமல் துரத்தவே, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தோப்பில் 2 மர்ம நபர்கள் குதித்தனர். அந்த தோப்பு புதர் மண்டி சேறும் சகதியுமாக புதை குழியாக கிடக்கிறது. 2 வாலிபர்களும் போதையில் அந்த புதை குழியில் தவித்தனர். உடனடியாக பொதுமக்கள் மீட்டு, இரணியல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார்ந்த இளைஞர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story