போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணி

 விழிப்புணா்வு பேரணி

திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை சாா்பில் நடந்த போதைப் பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸாா் சாா்பில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை வருவாய்க் கோட்டாட்சியா் கமலக்கண்ணன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜபுஷ்பா முன்னிலை வகித்தாா். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

Tags

Next Story