அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

திருவேங்கடம் அரசு பள்ளியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமையாசிரியர் பொன் இருளாண்டி தலைமையில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவேங்கடம் வட்டாட்சியர் பரமசிவன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story