போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - சப்-கலெக்டர் பங்கேற்பு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி -  சப்-கலெக்டர் பங்கேற்பு

விழிப்புணர்வு பேரணி

சிவகாசியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து,சிவகாசி துணை ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில், அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, பெல் ஹோட்டல் மெனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள் மற்றும் எஸ்எப்ஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, போதை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு.சிவகாசியின் நான்கு ரத வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளின் வழியாக பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். நிகழ்ச்சியில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா,தனியார் அமைப்பு நிர்வாகிகள் சண்முகநடராஜன், பாரிராஜ், சந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story