போதை மாத்திரை விற்பனை; சிறுவன் உட்பட் 6 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை; சிறுவன் உட்பட் 6 பேர் கைது

பைல் படம் 

கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ரயில் வாயிலாக மும்பை சென்று, அங்கிருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய பகுதிகளில், விற்பனை செய்வது உறுதியானது.

இதையடுத்து, மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்த, ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த மாணிக்கம், 21, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரை, அரக்கோணம் ரயில் நிலையத்தில், கோயம்பேடு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3,000 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவர்களது தகவல்படி, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அரிஷ், 35, விஜயகுமார், 22, அஜய், 22, கோகுல், 21, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் மொபைல் போனில் குழு அமைத்து, வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரிந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story