பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்தல் - மேலும் நான்கு பேர் கைது

பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்தல் - மேலும் நான்கு பேர் கைது

காவல் நிலையம் 

பெரியகுளம் பகுதியில் காரில் மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளை கடத்திய வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் காரில் மெத்தப் பெட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் பெரியகுளம் காவல்துறையினர் ஆரிப்,ஷியாம் ஆகிய இருவரை கடந்த 28ஆம் தேதி கைது செய்தனர் இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ராம்குமார், ஆனந்த் ,யாசர் முக்தார் ,அன்பழகன் ஆகிய நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நோகன், சல்மான் கான் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Tags

Next Story