குஜராத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம்: அமைச்சர் ரகுபதி

குஜராத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம்: அமைச்சர் ரகுபதி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி

குஜராத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, குஜராத் என்பது போதைப் பொருளுக்குகளின் நடமாட்டத்திற்கான மாநிலம் அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள்கள் வருகிறது, பின் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விஜயபாஸ்கர் காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார்,

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை தடுத்து அவரது கல்லூரிக்கும் அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறாரர், வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம்,

அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள் அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது, ஆனால் இதை அனுமதிக்க முடியாது விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வட மாநிலங்களுக்கு பிரச்சாரம் செல்வது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story