நாயை கட்டி வைத்து அடித்து கொன்ற போதை வாலிபர் கைது !

நாயை கட்டி வைத்து அடித்து கொன்ற போதை வாலிபர் கைது !

கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வேலாயுதம்பாளையம் பகுதியில் நாயை கட்டி வைத்து அடித்து கொன்ற போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகே நாயை கட்டி வைத்து அடித்து கொன்ற போதை வாலிபர் கைது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த தஸ்தகீர்,( 40)சரி வர வேலைக்கு செல்லாமல், மது அருந்தியும்., கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றி திரிந்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் இருந்த தஸ்தகீர் அப்பகுதியில் உள்ள தெரு நாயை பிடித்து சேட்டை செய்துள்ளார். அப்போது அந்த நாய் தஸ்தகீரை கடித்துள்து. இதனால் ஆத்திரமடைந்த அவர் நாயின், பின்னங்கால்களை கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கியதில் நாய் உயிரிழந்தது. இதனை பார்த்த அவ்வழியே சென்ற நபர் விடியோ வாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட.காளீஸ்வரி என்பவர் அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் நாயை கொலை செய்த தஸ்தகீரை கைது செய்தனர்.

Tags

Next Story